கொரோனா தொற்று உறுதியான மேலும் 453 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை தெரிவித்துள்ளது.
முன்னதாக இன்று 1,530 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருந்தனர்.
அதன்படி இன்று கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,983ஆக உயர்வடைந்துள்ளது.
இறுதியாக கடந்த யூலை 28ஆம் திகதி நாளொன்றில் 2,000க்கும் குறைவான தொற்றாளர்கள் எண்ணிக்கை பதிவாகியிருந்தது.
குறித்த தினத்தில் 1,940 பேர் கொவிட் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டிருந்தனர்.
இந்நிலையில், 51 நாட்களின் பின்னர் நாளொன்றில் மீண்டும் 2,000க்கும் குறைவான கொவிட் தொற்றாளர்கள் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 502,755 ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன்,கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 1,260 பேர் இன்று குணமடைந்துள்ளனர்.
அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 431,036 ஆக அதிகரித்துள்ளது.