நிரந்தர கொள்கை வகுக்கப்பட்டால் இலங்கையும் அபிவிருத்தியடைந்த நாடாக மாறும் – ரணில்

Ranil 1
Ranil 1

சீனா போன்ற சில அபிவிருத்தியடைந்த நாடுகளைப் போல ஒரு நிரந்தரமான தேசியக்கொள்கை வகுக்கப்பட்டால் இலங்கையை அபிவிருத்தியடைந்த நாடாக மாற்றமடையச் செய்ய முடியும் என ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர் ஜயவர்தனவின் 115ஆவது பிறந்ததினத்தை முன்னிட்டு காணொளி தொழிநுட்பம் ஊடாக இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்துக்கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இதனை தெரிவித்தார்.