யாழில் வீட்டில் உயிரிழந்த இருவருக்குக் கொரோனா

corona
corona

யாழ்ப்பாணத்தில் வீட்டில் உயிரிழந்த இருவருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் குறித்த நபர்களுக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 91 வயது வயோதிபர் ஒருவரும், சாவகச்சேரியைச் சேர்ந்த 41 வயது குடும்பஸ்தர் ஒருவரும் இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.