பாதுகாப்பற்ற கட்டுமானக் குழியில் விழுந்து ஒருவர் பலி!

1632036746 Dead Boy L
1632036746 Dead Boy L

பாதுகாப்பற்ற கட்டுமான குழியொன்றில் விழுந்து மோட்டார் சைக்கிள் ஒன்றில் பின்னால் அமர்ந்து சென்றவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பேருவளை நகர சபையினால் சுமார் ஒரு மாதக் காலமாக வீதியில் கட்டுமானப் பணிகள் முன்னெடுக்கப்படுவதாக பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.

வீதி நிர்மாணம் குறித்து அந்த இடத்தில் எந்த அறிவிப்பு பலகையும் அமைக்கப்படவில்லை என்றும் அந்த இடம் இரவு நேரங்களில் மிகவும் ஆபத்தானது என்றும் அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

இரண்டு இளைஞர்கள் மோட்டார் சைக்கிளில் வேகமாக பயணித்துள்ள நிலையில், வேகக்கட்டுப்பாட்டை இழந்து ரயில் கடவைக்கு அருகிலுள்ள கட்டுமானத் தளத்தில் கம்பிகள் மீது விழுந்ததாக காவற்துறையினர் தெரிவித்தனர்.

இதேவேளை, மோட்டார் சைக்களில் ஓட்டுனர் குடிபோதையில் இருந்ததாக பேருவளை காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

பேருவளை, மாகலகந்த பிரதேசத்தை சேர்ந்த 35 வயதுடைய திருமணமாகாத நபர் ஒருவரே விபத்தில் உயிரிழந்துள்ளார்.

படுகாயமடைந்த குறித்த நபர் பேருவளை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்.

விபத்து தொடர்பில் மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பேருவளை காவற்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்