மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் தற்காலிக பொறிமுறையானது ஐக்கிய நாடுகள் சாசனத்தின் நோக்கங்களுக்கு ஏற்ப இல்லை என்பதுடன் அதனை இலங்கையால் ஏற்றுக்கொள்ள முடியாது என வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
பொதுநலவாய நாடுகளின் பொதுச் செயலாளருடன் காணொளி தொழிநுட்பம் ஊடாக இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அத்துடன், பொதுநலவாய நாடுகளுடன் இணைந்து செயற்பட இலங்கை தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் இருப்பதாகவும் வெளிவிவகார அமைச்சர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.