மஞ்சளுடன் 10 பேர் கைது

manchal
manchal

மன்னாரில் கடந்த 3 நாட்களாக இடம்பெற்ற திடீர் சோதனை நடவடிக்கைகளில் உலர்ந்த மஞ்சளுடன் 6 இந்திய பிரஜைகள் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்

கைதானவர்களிடம் இருந்து 3,704 உலர்ந்த மஞ்சள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

அதனடிப்படையில், மன்னாரில் இருந்து தெற்கு கடற்பரப்பில் 60 மூடைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2,100 கிலோகிராம் உலர்ந்த மஞ்சளுடன் 6 இந்திய பிரஜைகள் கைது செய்யப்பட்டனர்.

அத்துடன் மன்னார் சவுத் பார் மற்றும் எருக்கலம்பிட்டி களப்பு ஆகிய பகுதிகளில் இருந்து உலர்ந்த மஞ்சள் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.