இந்தியாவில் இன்று காலையுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில் 30,256 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதியாகியுள்ளது.
இந்திய மத்திய சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கமைய தொற்று உறுதியானர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 34 இலட்சத்து 78 ஆயிரத்து 4199 ஆக அதிகரித்துள்ளது.
295 பேர் மரணித்த நிலையில், மொத்த கொவிட்-19 மரணங்களின் எண்ணிக்கை, 4 இலட்சத்து 45 ஆயிரத்து 133 ஆக உயர்வடைந்துள்ளது.
அதேநேரம் 37 ஆயிரத்து 127 பேர் கொவிட்-19 தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.
இதற்கமைய குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை, 3 கோடியே 27 இலட்சத்து 15 ஆயிரத்து 105 ஆக அதிகரித்துள்ளது.