கணவனை கத்தியால் குத்தி கொலை செய்த மனைவி

201904300411261599 Van Drivers murder SECVPF
201904300411261599 Van Drivers murder SECVPF

கண்டி மாவட்டம், பொல்காஹவல காவல்துறை பிரிவுக்குட்பட்ட மெட்டிகும்புர பிரதேசத்தில் குடும்பத்தகராறு காரணமாக தனது கணவரை மனைவி கத்தியால் குத்திப் படுகொலை செய்துள்ளார் என்று காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்தச் சம்பவத்தில், மெட்டிகும்புர, கெந்தேஹேன பிரதேச்தைச் சேர்ந்த 42 வயதுடை குடும்பஸ்தரே படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

சம்பவத்தில் படுகாயமடைந்த நபர் குருநாகல் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட போதிலும் குறித்த நபர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.