வட்டுக்கோட்டையில் வன்முறை கும்பல் அட்டகாசம்

தாக்குதல்
தாக்குதல்

வட்டுக்கோட்டை முதலியார் கோவில் பகுதியில், நேற்றைய தினம் (19) வன்முறைக் குழு ஒன்று தாக்குதல் நடாத்தியுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

மாவடி பகுதியைச் சேர்ந்த வன்முறை கும்பல் ஒன்று, நேற்று இரவு 7 மணியளவில் முதலியார் கோயில் பகுதிக்குள் உள்நுழைந்து அங்கு தாக்குதல் நடத்தியுள்ளது.

இத்தாக்குதல் சம்பவத்தில் ஒருவர் வாள்வெட்டுக்கு இலக்காகியுள்ளார்.

வாள்வெட்டிற்கு இலக்கான குடும்பஸ்தர் யாழ். போதனா வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.