எக்ஸ்ப்ரஸ் பேர்ள் கப்பலில் இருந்து எரிபொருளை வெளியேற்ற வேண்டும் !

X Press Pearl fire expolosion 750x375 1
X Press Pearl fire expolosion 750x375 1

தீப்பற்றுதலுக்குள்ளாகி கடலில் மூழ்கிய எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலை அகற்றுவதற்கு முன்னர், அதில் உள்ள எரிப்பொருள் முழுமையாக வெளியேற்றப்பட்டிருக்க வேண்டும் என குறித்த கப்பல் நிறுவனத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சமுத்திர பாதுகாப்பு அதிகார சபையினால் இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த கப்பலில் எரிப்பொருள் எஞ்சியிருப்பின் அதனை முழுமையாக அகற்றிய பின்னர் கப்பலையும், கொள்கலன்களையும் வெளியேற்ற முடியும் என சமுத்திர பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் தர்ஷினி லஹந்துபுர தெரிவித்துள்ளார்.

தற்போது அந்த கப்பல் நிறுவனமானது அது தொடர்பான ஆய்வுகளை முன்னெடுத்து வருகின்றது.