காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்குவதை அரசாங்கம் நிறுத்த வேண்டும் என்றும், அதனைப் பெற்றுக்கொள்வதற்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தயாரில்லை என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
நாடாளுமன்றில் இன்று இடம்பெற்ற விவாதத்தில் உரையாற்றியபோது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் இதனைத் தெரிவித்துள்ளார்.