சுகாதார சேவை ஊழியர்களால் தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுப்பு

202005121237099448 Tamil News Nurses Day SECVPF
202005121237099448 Tamil News Nurses Day SECVPF

ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து, ஒன்றிணைந்த சுகாதார சேவை ஊழியர்கள் சங்கம், நாடளாவிய ரீதியில் உள்ள வைத்தியசாலைகளில் முன்னால் இன்று தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட தீர்மானித்துள்ளது.

சங்கத்தின் பிரதான செயலாளர் தெம்பிட்டியே சுதகானந்த தேரர் இதனைத் தெரிவித்துள்ளார்.

கொவிட்-19 விசேட கொடுப்பனவான 7,500 ரூபாவை மீள வழங்க வேண்டும் என்பது இந்தப் போராட்டத்தின் பிரதான நோக்கமாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.