உலக சுற்றுலா தினம் இன்றாகும். ஒருங்கிணைந்த வளர்ச்சிக்கான சுற்றுலாத்துறை எனும் தொனிப்பொருளின் கீழ் இந்த முறை சுற்றுலா தினம் கொண்டாடப்படுகின்றது.
இந்நிலையில் இலங்கையின் பொருளாதாரத்தை பலப்படுத்துவதில் சுற்றுலாத்துறையினால் கிடைக்கும் பங்களிப்பு அளப்பரியதாகும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
சுற்றுலா தினத்தை முன்னிட்டு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ விடுத்துள்ள வாழ்த்து செய்தியில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.