வவுனியாவில் தொற்று காரணமாக இருவர் மரணமடைந்துள்ளதாக சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
வவுனியா, பட்டாணிச்சூர் பகுதியை சேர்ந்த 55 வயதுடைய ஆண் ஒருவரும், வவுனியா, உக்குளாங்குளம் பகுதியை சேர்ந்த 85 வயதுடைய ஆண் ஒருவருமே இவ்வாறு மரணமடைந்தவர்களாவர்.
மரணமடைந்தவர்களின் சடலங்களை சுகாதார முறைப்படி தகனம் செய்வதற்குரிய நடவடிக்கைகளை சுகாதாரப் பிரிவினர் முன்னெடுத்துள்ளனர்.