கொழும்பு மாவட்டத்தில் கொவிட் பரவலால் பாதிக்கப்பட்ட 13 பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட மக்களின் நலன்புரி நடவடிக்கைகளுக்காக 7,947 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
கொழும்பு மாவட்ட செயலாளர் பிரதீப் யசரத்ன இதனை தெரிவித்துள்ளார்.
நான்கு சந்தர்ப்பங்களில் 5,000 ரூபா கொடுப்பனவுக்காக 5,336 மில்லியன் ரூபாவும், 2,000 ரூபா கொடுப்பனவுக்காக 258 மில்லியன் ரூபாவாவும் செலவிடப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஒன்றரை வருட காலப்பகுதியில், தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்காக அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அடங்கிய 10,000 ரூபா நிவாரணப் பொதி வழங்கலுக்காக 803 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.