சமீபத்திய கோதுமை மாவின் விலை உயர்வைக் குறைக்கவும் முந்தைய விலையில் உடனடியாக அமுல்படுத்தவும் கோதுமை மாவு நிறுவனங்கள் ஒப்புக் கொண்டதாக விவசாய அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நிறுவனங்கள் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 06) ஒரு கிலோ கோதுமை மாவின் விலையை ரூ .5.50 ஆக உயர்த்தியிருந்தன. அதே நேரத்தில் விலை உயர்வுக்கு இணங்க முகவர்களுக்கு அறிவிக்கப்பட்டிருந்தது,
இந்நிலையில் கோதுமை மாவின் விலையை அதன் ஒப்புதல் இல்லாமல் உயர்த்துவதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று நுகர்வோர் விவகார ஆணையம் (CAA) வலியுறுத்தியது.
இருப்பினும், விலைவாசி உயர்வுக்கான காரணத்தைக் காட்ட நிறுவனங்களின் பிரதிநிதிகள் இன்று வாழ்க்கைச் செலவுக் குழுவின் முன் அழைக்கப்பட்டு கோதுமை மாவின் விலை உயர்வு தொடர்பான காரணங்களைக் காட்ட 3 வார கால அவகாசம் வழங்கப்பட்டது என்றும் கூட்டத்தில் கோதுமை மாவை பழைய விலையில் விற்க நிறுவனங்கள் ஒப்புக்கொண்டதாக வேளாண் அமைச்சர் பி. ஹாரிசன் கூறுகிறார்.