கொடிகாவத்தை – முல்லேரியா பிரதேச சபையின் தவிசாளர் ரங்கஜீவ ஜயசிங்க கொவிட் தொற்றால் உயிரிழந்துள்ளார்.
இரண்டு பிள்ளைகளின் தந்தையான இவர் தனது 55 ஆவது வயதில் உயிரிந்துள்ளார்.
கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த இவருக்கு, மீளவும் கொவிட் தொற்று உறுதியானதையடுத்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.