கொரோனா வைரஸ் தொற்று காரணமாக அமுல்படுத்தப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை நீக்குவதற்கு ஜப்பான் தீர்மானித்துள்ளது.
தொற்றின் தாக்கம் குறைவடைந்து வருவதால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஜப்பானிய பிரதமர் யொஷிஹிடே சுகா அறிவித்துள்ளார்.
இதுவரைக் காலமும் ஜப்பானில் அமுல்படுத்தப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை நாளை மறுதினம் முதல் கட்டம் கட்டமாக தளர்த்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்த வேண்டியது அவசியமாகும்.
அதனைக் கருத்திற்கொண்டு மக்களின் ஒத்துழைப்புடன் எதிர்கால செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் என ஜப்பானிய பிரதமர் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் காரணமாக ஜப்பானில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் சுகாதார கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.