அரச மற்றும் தனியார் துறையினர் சேவைக்கு சமூகமாகும் நேரத்தையும், சேவை நிறைவு பெறும் நேரத்தையும் மாற்றியமைத்தால் அலுவலக புகையிரத சேவையை சமூக இடைவெளிக்கு அமைய மீள ஆரம்பிக்க முடியும்.
இவ்விடயம் தொடர்பில் பொதுத்துறை நிர்வாக அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். என புகையிரத திணைக்கள பொதுமுகாமையாளர் தம்மிக ஜயசுந்தர தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
காலை மற்றும் மாலை புகையிரத சேவையில் நிலவும் சன நெரிசலை கட்டுப்படுத்தும் யோசனையை முன்வைப்பதற்கும், புகையிரத பாதைகளையும் திருத்துவதற்கும், புகையிரத பெட்டிகள் கிருமி தொற்று நீக்கல் செய்யும் பணிகளுக்காகவும் புகையிரத சேவை இரண்டு வார காலத்திற்கு முடக்கப்பட்டுள்ளது.
சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்களுக்கு அமைய புகையிரத சேவையை ஆரம்பிப்பது தொடர்பிலான யோசனையை இரண்டு வார காலத்திற்குள் முன்வைக்குமாறு போக்குவரத்து அமைச்சு குறிப்பிட்டுள்ளது என்றார்.