எதிர்வரும் 04ஆம் திகதி முதல் சிறைக்கைதிகளை பார்வையிட அனுமதி

சிறை
சிறை

எதிர்வரும் 04ஆம் திகதி முதல் சிறைக் கைதிகளை பார்வையிடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் பேச்சாளர் சந்தன ஹேக்கநாயக்க தெரிவித்துள்ளார்.

கொவிட் பரவல் காரணமாக சிறைக் கைதிகளை பார்வையிடும் நடவடிக்கை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில், நாட்டில் கொவிட் தொற்றாளர்கள் எண்ணிக்கை குறைவடைந்து வருகின்ற நிலையில் இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.