முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலையில் விசேட வைத்திய நிபுணர்களுக்கான பற்றாக்குறை நிலவுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் முல்லைத்தீவு கிளை செயலாளர் சித்திரவேலாயுதம் பாலவினோதன் இதனைத் தெரிவித்துள்ளார்.
பொது மருத்துவம், சத்திர சிகிச்சை, குழந்தை மருத்துவம் மற்றும் மகப்பேற்று ஆகிய விசேட துறையில் தலா இரண்டு வெற்றிடங்கள் நிலவுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனால் நோயாளிகளை வேறு வைத்தியசாலைகளுக்கு மாற்றும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் முல்லைத்தீவு கிளை செயலாளர் சித்திரவேலாயுதம் பாலவினோதன் குறிப்பிட்டுள்ளார்.