நாட்டின் பல பகுதிகளில் இன்றிரவு இடியுடன் கூடிய மழை!

rain
rain

நாட்டின் மேல், வடக்கு, சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்றிரவு இடியுடன் கூடிய மழைபெய்யக்கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்தப் பகுதிகளில் 75 மில்லிமீற்றர் அளவில் பலத்த மழைபெய்யக்கூடும் என அந்தத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

அதேநேரம் கிழக்கு, வடமத்திய, ஊவா மாகாணங்களின் சில இடங்களில் 100 மில்லி மீற்றர் அளவில் பலத்த மழைபெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.