தற்போதைய நிலைமைக்கு மத்தியில் மாகாண சபை தேர்தலை விரைவில் நடத்த முடியாது என மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன் தெரிவித்தார்.
தேர்தலை விரைவாக நடத்துமாறு எதிர்க்கட்சித் தலைவர் அண்மையில் வெளியிட்ட அறிக்கை குறித்து தம்புள்ளையில் இன்று(03) செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
தேவையாயின் எதிர்க்கட்சி தலைவர், அவருக்கென்று தனியாக ஒரு தேர்தலை நடத்திக்கொள்ளட்டும் என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.