குருணாகல் – அம்பன்பொல தெற்கு பிரிவு கிராம சேவகர் கூரிய ஆயுதங்களால் தாக்கிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
இரண்டு பிள்ளைகளின் தந்தையான, 50 வயதுடைய குறித்த கிராம சேவகர், பிரதேச செயலகத்தில் நடைபெறவிருந்த கூட்டமொன்றில் கலந்துகொள்வதற்காக தனது வீட்டிலிருந்து இன்று காலை உந்துருளியில் பயணித்துள்ளார்.
அதன்போது, சிற்றுந்தொன்றில் வந்த இனந்தெரியாத நபர்கள், கிராம சேவகரின் உந்துருளியை வழிமறித்து, அவரைக் கூறிய ஆயுதங்களால் தாக்கிக் கொலை செய்துள்ளதாகக் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
சந்தேக நபர்கள் பயணித்த சிற்றுந்து காவல்துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேலும் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களும் அடையாளம் காணப்பட்டுள்ள அதேவேளை, அவர்களைக் கைதுசெய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.