சர்வதேச ஆசிரியர் தினத்தை முன்னிட்டு அதிபர், ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டுக்கான தீர்வை வலியுறுத்தி நாடளாவிய ரீதியில் இன்று ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.
அதற்கு ஆதரவு தெரிவித்து வவுனியாவிலும் குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
வவுனியா வடக்கு வலயம் சார்பாக காலை 9 மணிக்கு புதுக்குளம் பகுதியில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
ஆர்ப்பாட்டத்தில் இலங்கை ஆசிரியர் சங்கம், ஆசிரியர் சேவைகள் சங்கம் மற்றும் அதிபர்கள் கலந்து கொண்டனர்.