225 தலைமை காவல்துறை பரிசோதகர்களுக்கு பதவி உயர்வு

Srilanka Police
Srilanka Police

2014 ஆம் ஆண்டு தரமுயர்வுக்கான தகுதியை பெற்று, உயர்வு வழங்கப்படாமலிருந்த 225 தலைமை காவல்துறை பரிசோதகர்களை, உதவி காவல்துறை அத்தியட்சகர்களாக தரமுயர்த்தப்படவுள்ளனர்.

அதற்கமைய, 2014 ஆம் ஆண்டு தரமுயர்வை எதிர்பார்த்திருந்த குறித்த தலைமை காவல்துறை பரிசோதகர்களை உடனடியாக உதவி காவல்துறை பரிசோதகர்களாகத் தரமுயர்த்த பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஓய்வுபெற்ற அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார். 

இலங்கை காவல்துறை வரலாற்றில், இவ்வாறு பெருந்தொகையானோர் உதவி காவல்துறை அத்தியட்சகர்களாகத் தரமுயர்த்தப்படும் முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.

இந்நிலையில், இந்தத் தரமுயர்வினால் ஏற்படும் வெற்றிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கைக எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.