பண்டோரா ஆவண விவகாரம்; திருக்குமார நடேசனிடம் இன்று விசாரணை

Nirupama Rajapaksa 1 720x375 1
Nirupama Rajapaksa 1 720x375 1

நிருபமா ராஜபக்சவின் கணவரும், தொழிலதிபருமான திருக்குமார் நடேசனிடம், இலஞ்ச, ஊழல் ஆணைக்குழு இன்று (10) விசாரணை நடத்தவுள்ளது.

இதற்காக இன்று காலை ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு திருக்குமார் நடேசனுக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

உலகத் தலைவர்கள், அரசியல் பிரமுகர்கள், சினிமா மற்றும் விளையாட்டு நட்சத்திரங்கள் உட்பட மேலும் பலரின் இரகசிய சொத்துகள் மற்றும் கொடுக்கல் – வாங்கல்கள் தொடர்பான தகவல்கள் பண்டோரா ஆவணம் மூலம் அம்பலப்படுத்தப்பட்டுள்ளன.

குறித்த ஆவணத்தில் தொழிலதிபர் திருக்குமார் நடேசன் மற்றும் அவரின் மனைவி நிருபமா ராஜபக்ச ஆகியோரின் பெயர்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன.

குறித்த ஆவணத்திலுள்ள இலங்கையர்கள் தொடர்பில் விசாரணை நடத்தி ஒரு மாதத்துக்குள் தமக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால், இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன், இது தொடர்பில் சிவில் அமைப்புகள் சில குறித்த ஆணைக்குழுவில் முறைப்பாடுகளையும் முன்வைத்துள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.