திருகோணமலையில் ஒரு வார காலமாக மக்களை அச்சுறுத்தி வந்த இராட்சத மலைப்பாம்பு ஒன்று பிடிப்பட்டுள்ளது.
திருகோணமலை – சீனக்குடா பிரதேசத்தில் நேற்றய தினம் சுமார் 11 அடி நீளமான மலைபாம்பு ஒன்று, பிரதான வீதியை கடக்க முற்பட்ட போது பொதுமக்களால் பிடிக்கப்பட்டுள்ளது.
இவ் மலைபாம்பினால் தாங்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர் என பிரதேச வாசிகள் தெரிவிக்கின்றனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த வன விலங்கு அதிகாரிகள் பாம்பை மீட்டுச்சென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.