மேல் மாகாணத்தில் நேற்றிரவு 8 மணி முதல் 11மணி வரை மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் மதுபோதையில் வாகனம் செலுத்திய 134 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் வீதி ஒழுங்கு விதிகளை மீறிய 334 பேரும் குறித்த காலப்பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் கவனக்குறைவாக வாகனம் செலுத்திய 26 பேருக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளதாகவும் குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.