தேசிய கீதத்தை மாற்றுமாறு பிரபாகரன் கோரவில்லை – தேரர் தெரிவிப்பு

thero
thero

பிரபாகரன் நாட்டை பிரிக்குமாறு கூறினாலும் தேசிய கீதத்தை மாற்றுமாறு கோரவில்லை என அபயராம விகாரையின் விகாராதிபதி முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்தார்.

அபயராம விகாரையில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

தேசிய கீதத்தை சிங்கள மொழியில் மாத்திரம் பாட வேண்டும் என எடுத்த தீர்மானம் சரியானது.

நாட்டை துண்டாக பிரிக்க முயற்சித்த பிரபாகரனின் காலத்தில் கூட எமது தேசிய கீதத்தை மாற்றுமாறு கோரிக்கை விடுக்கப்படவில்லை.

நல்லாட்சி அரசாங்கம் செய்த தூர நோக்கற்ற செயலை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்லுமாறு சுமந்திரன் போன்றவர்கள் கோருவார்களாயின் அது பிரபாகரனுக்கு செய்யும் அவமதிப்பு.

பிரபாகரன் நாட்டை பிரிக்குமாறு கூறினாலும் தேசிய கீதத்தை பிரிக்குமாறு கூறவில்லை எனவும் ஆனந்த தேரர் குறிப்பிட்டார்.