முல்லைத்தீவில் சக்கர நாற்காலி வழங்கி வைப்பு

received 404187541166239
received 404187541166239

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மாங்குளம் கிராமத்தில் வசிக்கின்ற 36 வயதுடைய நபர் ஒருவர் அண்மையில் விபத்து காரணமாக இடுப்பிற்கு கீழ் இயங்க முடியாத நிலைமைக்கு சென்றிருந்தார்.

இந்நிலையில் குறித்த நபருக்கு சக்கர நாற்காலி இல்லாத காரணத்தினால் அவர் பல்வேறு இன்னல்களுக்கு முகம் கொடுத்து வந்த நிலையில் புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினர் முத்துசாமி முகுந்தகஜன் அவர்களிடம் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக குறித்த நபருக்கு சுமார் 37 ஆயிரம் ரூபா பெறுமதியான சக்கர நாற்காலி ஒன்று நேற்றையதினம் (17)வழங்கி வைக்கப்பட்டது

ஆதர்சம் பவுண்டேசன் ஊடாக குறித்த சக்கர நாற்காலி பெற்றுக் கொடுக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது

இதன் அடிப்படையிலேயே குறித்த சக்கர நாற்காலியை நேற்றையதினம் மாங்குளத்தில் வைத்து குறித்த பயனாளியிடம் ஆதர்சம் பவுண்டேசன் தலைவர் மு.லக்சயன் மற்றும் மாங்குளம் இத்தியடி சித்தி விநாயகர் ஆலய பிரதம குரு மாங்குளம் ,மல்லாவி பங்குத்தந்தை மற்றும் புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினர் முத்துசாமி முகுந்தகஜன் உள்ளிட்டவர்களிடம் கையளித்தனர்