பூநகரி பிரதேச மக்களின் தேவைகள் தொடர்பில் இன்று தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தினால் பூநகரி பிரதேச செயலாளரிடம் மகஜர் கையளிக்கப்பட்டுள்ளது.
இன்று காலை 9 மணியளவில் பிரதேச செயலாளர் எஸ்.கிருஸ்ணேந்திரனிடம் இவ்வாறு மகஜர் கையளிக்கப்பட்டது.
அதிலும் குறிப்பாக தற்போதைய நாட்டின் பொருளாதார நிலைமை மேலும் மக்களை அவல நிலைக்கு கொண்டு செல்கின்றது.
விவசாய ரீதியான செயற்ப்பாடுகள் மற்றும் மீன்பிடி ரீதியான செயற்ப்பாடுகள் மிகவும் கவலைக்குரிய விடயமாகவே காணப்படுகின்றது.
அதிகம் கடல் வளத்தையும் விசாயத்தையும் நம்பி மக்களின் வாழ்வாதாரம் தங்கியுள்ளது.
அந்த வகையில் மக்களின் விவசாயம் மற்றும் மீன்பிடி செயற்ப்பாடுகளை மேற்கொண்டு தமது பொருளாதாரத்தை உயர்த்துவதற்கு எமது பூநகரி பிரதேசத்தில் பல தடைகள் காணப்படுகின்றது.
அந்த தடைகளில் இருந்து மக்கள் விடுவிக்கப்பட்டால் மக்களின் பொருளாதாரத்திற்கு மற்றும் வாழ்வாதாரத்திற்கும் உதவியாக அமையும். என குறிப்பிடப்பட்டுள்ளது.