சௌபாக்கியா வீடமைப்பு திட்டத்தில் அமைக்கப்பட்ட வீடுகள் கையளிப்பு

05
05

மட்டக்களப்பு மாவட்டத்தில் பதினான்கு பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் சௌபாக்கியா வீடமைப்புத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

இத்திட்டத்தில் ஓட்டமாவடி பிரதேச செயலக பிரிவில் சமுர்த்தி சௌபாக்கியா வீடமைப்பு திட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்டு வீடமைப்பு வேலைகளை பூரணப்படுத்திய வீடுகளை பயனாளிகளுக்கு கையளிக்கும் நிகழ்வு ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் இன்று திங்கள் கிழமை இடம் பெற்றது.

ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் பூரணப்படுத்தப்பட்ட மூன்று வீடுகள் பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டது. இவ் வீடுகளுக்கு சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களத்தினால் இரண்டு லட்சம் ரூபா வீதம் ஒவ்வொரு வீட்டுக்கும் வழங்கப்பட்டதுடன் மீதித் தொகையினை பயனாளிகளின் பங்களிப்பாக வீடுகள் பூரணப்படுத்தப்பட்டுள்ளது.