ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர்.
குறித்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றறுள்ளது.மாத்தளை உக்குவெளை பகுதியில் உள்ள சட்டவிரோத மின்சார வேலியில் சிக்கியே பரிதாபமாக பலியாகியுள்ளனர்.
வெளியே சென்றிருந்த தந்தை வீட்டுக்கு வராததன் காரணமாக, மேற்படி மூவரும் தந்தையை தேடிச் சென்ற வெளியே சென்றிருந்த போதே இவ்வாறு மின்சாரம் தாக்கியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
சம்பவத்தில் மகள் அதிஸ்டவசமாக எவ்வித காயமுமின்றி உயிர் தப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது