மட்டக்களப்பு – இருதயபுரம் பிரதேசத்தில் இரு குழுக்களுக்கிடையே நேற்றிரவு இடம்பெற்ற மோதலில் 3 பேர் படுகாயமடைந்தனர்.
உணவகமொன்றில் இரு குழுக்களுக்கிடையே இடம்பெற்ற வாய்த் தர்க்கம் மோதலாக மாறியதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதில் 3 பேர் வாள் வெட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
முச்சக்கரவண்டி ஒன்றும் தீயில் எரிந்து முற்றாக சேதமடைந்துள்ளது.
சம்பவ இடத்திற்கு பொலிஸார் விரைந்த உடன் மோதலில் ஈடுபட்ட இரு குழுக்களைச் சேர்ந்தவர்களும் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.