குறுகிய காலத்தில் பெருமளவான மக்களுக்குத் தடுப்பூசி செலுத்திய நாடுகள் பட்டியலில் இலங்கையும் உள்ளடங்குவதாகத் தொற்று நோய் பிரிவின் விசேட வைத்தியர் சமித்த கினிகே தெரிவித்துள்ளார்.
அதற்கமைய, 20 சதவீதமான மக்கள் முதலாவது தடுப்பூசியைப் பெற்றுக் கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
நேற்றைய தினம்வரை 87 சதவீமானவர்கள் இரண்டாவது தடுப்பூசியினை பெற்றுக் கொண்டுள்ளனர்.
இதன்படி நாட்டின் முழு சனத்தொகையில் 67.4 சதவீமானவர்கள் முதலாவது தடுப்பூசிகளை ஏற்றிக் கொண்டுள்ளதாக விசேட வைத்தியர் சமித்த கினிகே தெரிவித்தார்.
அத்துடன், நாட்டின் மொத்த சனத்தொகையில் 58.3 சதவீமானவர்கள் இரண்டு தடுப்பூசிகளையும் ஏற்றிக் கொண்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.