ஹொரணை – கொழும்பு வீதியில் கொஹுவல சந்தியில் பொதுப்போக்குவரத்து பேருந்துகளைத் தவிர ஏனைய வாகனங்களின் போக்குவரத்தை கட்டுப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதன்படி ஒக்டோபர் 21ஆம் திகதி முதல் டிசம்பர் 20ஆம் திகதி வரை குறித்த வீதியில் போக்குவரத்து கட்டுப்படுத்தப்படவுள்ளது.
கொஹூவல மேம்பாலம் நிர்மாணிக்கப்படுவதால் போக்குவரத்து கட்டுப்படுத்தப் பட்டுள்ளது. முடிந்தவரை மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு வீதி அபிவிருத்தி அதிகார சபை வாகனச்சாரதிகளிடம் கேட்டுக்கொண்டுள்ளது.