பாம்பு தீண்டியதில் ஒருவர் உயிரிழப்பு

snake
snake

புடையன் பாம்பு தீண்டியதில் குடும்பஸ்தர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த சம்பவத்தில் மட்டுவில் வடக்கை சேர்ந்த 65 வயதுடைய கந்தன் சண்முகம் என்பவரே உயிரிழந்ததாக தெரிய வருகிறது.

மட்டுவில் பகுதியில் வசித்து வரும் இவர் கடந்த 26 ஆம் திகதி வளவு ஒன்றினை துப்புரவு செய்து கொண்டு இருக்கும் வேளையில் எதிர்பாராத விதமாக காலில் பாம்பு தீண்டிய நிலையில் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

அதன் பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம்(28)இரவு உயர்ந்தார்.

இறப்பு தொடர்பான விசாரணையை யாழ் போதனா வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.