வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் மீது தாக்குதல் முயற்சி!

mastan
mastan

வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் கே.கே.மஸ்தான் மீது வாள்வெட்டு குழுவொன்று தாக்குதல் நடத்த முயற்சித்துள்ளது. இதில் அவரது பாதுகாப்பு அதிகாரி கையில் காயமேற்பட்டுள்ளது.

நேற்று (29) இரவு இந்த தாக்குதல் சம்பவம் நடந்தது.

வவுனியா பாவற்குளம் பகுதியில் நேற்று மக்கள் சந்திப்பினை நடத்திவட்டு, வவுனியாவிற்கு சென்று கொண்டிருக்கையில் பாவற்குளம் பகுதியில் ஆதரவாளர் ஒருவரை வீட்டில் இறக்குவதற்காக மஸ்தான் எம்.பியும் சென்றார்.

இதன்போது அப்பகுதியில் நின்ற சிலர் வாள்களால் மஸ்தான் எம்.பியை தாக்க முயற்சித்த போது
உடனடியாக சுதாகரித்துக்கொண்ட பாதுகாவலர்கள், தாக்குதல் முயற்சியை தடுக்க முற்பட்ட போது பாதுகாவலரின் கைப்பகுதியில் காயமேற்பட்டுள்ளது.

தாக்குதலை நடத்திய குழுவினர் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டனர்.

காயமடைந்த பாதுகாப்பு அதிகாரி வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

சம்பவம் தொடர்பில் பொலிஸாரும், இராணுவத்தினரும் இணைந்து தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.