இலங்கை புகையிரத பாதுகாப்பு சேவைக்கென 180 அதிகாரிகளை புதிதாக இணைத்துக்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது .
நேற்று இடம்பெற்ற எழுத்துமூல பரீட்சை பெறுபேறுகளுக்கு அமைய ஊழியர்கள் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளதாக ரயில்வே பாதுகாப்பு அத்தியட்சர் அனுரபிரேமரத்ன தெரிவித்துள்ளார்.
ரயில் பாதுகாப்பு சேவையில் 253 ஊழியர் வெற்றிடயங்கள் காணப்படுவதனால் எதிர்வரும் காலங்களில் மேலும் ஊழியர்கள் புதிதாக இணைத்துக்கொள்ளப்படவுள்ளதாக ரயில்வே பாதுகாப்பு அத்தியட்சகர் சுட்டிக்காட்டியுள்ளார்.