ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவின் பணிப்புரைக்கமைய மட்டக்களப்பு, கல்லடி முதல் காத்தான்குடி வரையான 2 கி.மீ கடற்கரை பிரதேசம் துப்பரவு செய்யும் சிரமதானப் பணி நேற்று (29) இடம் பெற்றது.
கிழக்கு மாகாண கட்டளைத் தளபதி மேஜர் ஜென்ரல் ரசிக பெர்னாண்டோவின் வழிகாட்லுக்கிணங்க இராணுவ பிரிவு மற்றும் மட்டக்களப்பு மாநகரசபை சுகாதாரப் பிரிவினர் இணைந்து இப்பணியை மேற்கொண்டனர்.
இந்நிகழ்வில் புணானை 23 ஆவது படைப்பிரிவின் கட்டனை அதிகாரி தம்மிக்க ஜெயசுந்தர, மட்டக்களப்பு மாநகரசபையின் சுகாதார நிலையியற் குழுவின் தலைவர் சிவம் பாக்கியநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.