முல்லேரியா – ஹிம்புட்டான பகுதியில் உள்ள இரண்டு மாடி வீடொன்றில் செய்கை பண்ணப்பட்ட, குஷ் ரக போதைப்பொருளை உற்பத்தி செய்வதற்கான 33 செடிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
அந்த வீட்டின் மேல் மாடியில், விசேட கூடம் ஒன்று அமைக்கப்பட்டு, குறித்த செய்கை இடம்பெற்ற நிலையில், தலங்கம போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினர் இன்று அதனைக் கண்டுபிடித்துள்ளனர்.
குஷ் ரக போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்தபோது கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் இதற்கான சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த வீட்டில் அமைக்கப்பட்டுள்ள கூடத்தில், குளிரூட்டி இயந்திரங்கள் பொருத்தப்பட்டு, உரிய வெப்பநிலையுடன் அந்த செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நிர்மாணப் பணிகளில் ஈடுபடும் ஒருவருக்கு அந்த வீடு சொந்தமானது என விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.
இந்த நிலையில், 43 வயதான குறித்த சந்தேக நபரையும், அந்த வீட்டில் செய்கை பண்ணப்பட்ட செடிகளையும், மேலதிக விசாரணைக்காக, தலங்கம போதைப்பொருள் ஒழிப்பு பிரவினர், முல்லேரியா காவல்துறையிடம் கையளிக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.