யாழ்.வடமராட்சியில் விபத்து; 40 வயதான குடும்பஸ்த்தர் பலி!

IMG 20211026 WA0001 300x225 1
IMG 20211026 WA0001 300x225 1

யாழ்.வடமராட்சி    கப்புது வீதியில் நேற்றிரவு இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். தனது தாயாரின் வீட்டிற்கு கப்புது வீதியில் மோட்டார் சையிக்கிளில்  சென்று கொண்டிருந்த போது பால வேலைக்காக வெட்டப்பட்ட கிடங்கில் வேகக் கட்டுப்பாட்டை இழந்து பால வேலைக்காக குறுக்காக கட்டப்பட்ட சமிக்ஞையையும் தாண்டி பாலத்திற்குள் வீழ்ந்து விபத்திற்குள்ளாகியுள்ளார்

IMG 20211026 WA0003 768x1024 1 768x490 1

இதில் 40 வயதுடைய பொன்னுத்துரை காண்டீபன் எனும் இரண்டு  பிள்ளைகளின் தந்தையே  உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது. அவசர நோயாளர் காவு வண்டி சேவை ஊடாக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது உயிரிழந்துள்ளதுடன் இது தொடர்பான  விசாரணகளை நெல்லியடி காவற்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.