கொட்டும் மழையிலும் 1714 ஆம் நாளாக காணாமல்போனோரின் உறவுகள் போராட்டம்!

IMG20211027142542 01
IMG20211027142542 01

வவுனியாவில் கடந்த 1714 ஆவது நாட்களாக வீதியிலிருந்து போராடி வரும் காணாமல் போனோரின் உறவுகள் கொட்டும் மழைக்கு மத்தியிலும் தமது கோரிக்கையினை முன்வைத்து இன்றும் போராடி வருகின்றனர்.

வவுனியாவில் தமிழர் தாயகத்தில் கையளிக்கப்பட்டு, கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் தொடர்ந்தும் சுழற்சி முறையில் இன்றும் (27) தமது போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர். கையளிக்கப்பட்ட தமது உறவினர்களை விடுவிக்கக்கோரியும் அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரியும் அவசரகால சட்டத்தினை நீக்க கோரியும் தமது போராட்டத்தினை மேற்கொண்டுள்ளனர்.

வெளிநாடுகளின் தலையீடு அவசியம் எனவும் அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், இந்தியா உட்பட்ட நாடுகள் எமக்கு உதவி செய்து நேரடியாக இப்பிரச்சினையை தீர்த்து வைக்கவேண்டும் எனவும் கோரிக்கையை முன்வைத்து கொட்டும் மழையிலும் இப் போராட்டத்தினை மேற்கொண்டு வருகின்றனர்.