நினைவொன்றை மரமாக்குவோம் நிலையான வளமாக்குவோம் எனும் தொனிப்பொருளில் மர நடுகை ஆரம்ப நிகழ்வு திருகோணமலை, உவர்மலை மத்திய வீதியில் காலை 09.30 மணியளவில் இடம் பெற்றது.
சிறுமி ஒருவரின் பிறந்தநாளை முன்னிட்டு திருக்கொன்றை மரம் நடுகை இடம் பெற்றது.
குறித்த நிகழ்வில் சிறுமியின் பெற்றோர்கள், பொது மக்கள் ,எதிர்கால பசுமை உலகம் அமைப்பின் உறுப்பினர்கள் கலந்து கொண்டு மர நடுகையினை மேற்கொண்டனர்.