வல்வெட்டித்துறையில் வன்முறைக் கும்பலொன்று கைது!

6ee1008a 16c4 4809 b486 82490f7d717a 1
6ee1008a 16c4 4809 b486 82490f7d717a 1

வல்வெட்டித்துறை நெடியகாடு பகுதிக்கு அண்மையில் உள்ள வீடொன்றில் தங்கியிருந்த 13 பேர் காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

6ee1008a 16c4 4809 b486 82490f7d717a

சந்தேக நபர்களிடமிருந்து 5வாள்கள், 2 மோட்டார் சைக்கிள் செயின், 6 சரை கஞ்சா மற்றும் ஒரு கிராம் 650 மில்லிக் கிராம் ஐஸ் போதைப்பொருள் என்பன கைப்பற்றப்பட்டதாகப் காவற்துறையினர் தெரிவித்தனர்.

4b35bc40 1f92 43c4 af56 4c96ea198d95

இந்தக் கைது நடவடிக்கை இன்று மாலை 5 மணியளவில் இடம்பெற்றது.பழைய வீடொன்றில் வன்முறைக் கும்பல் ஒன்று வன்முறைக்கு தயாராகி வருவதாக காவற்துறையினருக்குக் தகவல் கிடைத்தது.அதன் அடிப்படையில் காவற்துறையினரும் இராணுவத்தினரும் இணைந்து வீட்டை சுற்றிவளைத்து சோதனையிட்ட போது சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர் என்றும் காவற்துறையினர் கூறினர்.

சந்தேக நபர்கள் 13 பேரும் வல்வெட்டித்துறை காவல் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்