புத்தளம், ஆனமடுவ பகுதியில் நேற்று (30) மின்னல் தாக்குதலுக்கு உள்ளான சிறுவன் ஒருவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளான்.
ஆனமடுவ, பாலியாகம பகுதியைச் சேர்ந்த 6 வயதுடைய சிறுவன் ஒருவனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
உயிரிழந்த குறித்த சிறுவன் தனது தாத்தாவுடன் வயலுக்குச் சென்ற போதே இவ்வாறு மின்னல் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பில் ஆனமடுவ காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.