கொழும்பு முதல் பதுளை வரையிலான நீண்ட தூர பேருந்து சேவை சில நாட்களுக்கு முன்னெடுக்கப்படமாட்டாது என பேருந்து நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
கம்பளை மற்றும் உலப்பனை பேருந்து நிலையங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் உள்ள பாலம் உடைந்துள்ளமையினாலேயே இந்த நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.
மேற்படி பாலம் திருத்தியமைக்கப்பட்டதன் பின்னர் கொழும்பு – கோட்டை மற்றும் பதுளைக்கு இடையிலான பேருந்து சேவை மீண்டும் ஆரம்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக, கண்டி வீதி ஊடான புகையிரத சேவைக்கு இடையூறு ஏற்பட்டுள்ளதாக பேருந்து நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.