இந்தியத் துணைத் தூதுவருடன் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திலகர் சந்திப்பு

FullSizeRender
FullSizeRender

இலங்கைக்கான இந்திய உதவித் தூதுவர் (கண்டி) முனைவர் எஸ். ஆதிராவை முன்னாள் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மலையக அரசியல் அரங்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான மயில்வாகனம் திலகராஜா சந்தித்துக் கலந்துரையாடினார்.

இதன்போது இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகரகத்தின் தலைமையில் இயங்கும் தோட்டத் தொழிலாளர் கல்வி நிதியத்தில் பயன் பெறும் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது, அத்தகைய உதவிகளைப் பெறுபவர்களின் சிக்கல்களுக்குத் தீர்வு காண்பது, அவர்களுக்கான புலமைப்பரிசில் தொகையை அதிகரிப்பது உள்ளிட்ட பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.

இந்தச் சந்திப்பின்போது உதவித் தூதரகத்தின் இரண்டாம் நிலை செயலாளர் கிருஷ்ணபிரசாத்தும் பிரசன்னமாகி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.