காட்டு யானைகள் அட்டகாசம்; மக்கள் கவலை

201906151020054607 sadivayal near elephant attack woman death SECVPF
201906151020054607 sadivayal near elephant attack woman death SECVPF

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் -ஒட்டுசுட்டான் வீதியில் காட்டு யானைகளின் அட்டகாசம் அதிகரித்துள்ளதாக பயணிகள் பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்

அந்தவகையில் நேற்று(2) மாலை மாங்குளம் ஒட்டுசுட்டான் வீதியில் 18 ஆவது கிலோமீற்றர் பகுதியில் வருகைதந்த காட்டு யானை ஒன்று மக்களை அச்சுறுத்தும் வகையில் வீதிக்கு குறுக்காக நின்றமையால் பயணிகள் வீதியால் பயணிப்பதில் பல்வேறு இடர்பாடுகளை மேற்கொண்டுவந்தனர்

இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பில் வனயீவராசிகள் திணைக்களத்துக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில் குறித்த இடத்துக்கு வருகைதந்த வனயீவராசிகள் திணைக்களத்தினரால் குறித்த யானை காட்டுக்குள் விரட்டிவிடப்பட்டுள்ளது

குறித்த பகுதியில் தொடர்ச்சியாக இவ்வாறு யானைகளால் ஏற்படும் இடர்பாடுகளால் மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது